×

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம்; பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி..!!

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. புதுச்சேரி பாப்பம்மாள் கோயில் இடுகாட்டில் சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. வீட்டில் இருந்து மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் சிறுமியின் உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இடுகாட்டில் சிறுமி ஆசையுடன் பயன்படுத்திய உடை, பொம்மைகள், பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து உடல் புதைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பின் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

The post புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம்; பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Muthialpettai ,Pappammal Temple Idughat ,Idughat ,
× RELATED புதுச்சேரி சிறுமி பாலியல்...